Monday, August 8, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

ரிஷாட் பதியூதீன் மீது மற்றுமொரு பாரிய குற்றச்சாட்டு – விசாரணைக்கு அவசர கோரிக்கை

November 26, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
237
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் ரிஷாட் பதியூதீன், அரசாங்கத்திற்கு சொந்தமான 775 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, மன்னார் – தாராபுரம் கூட்டுறவு கிராமத்தை நிர்மாணித்துள்ளதன் ஊடாக, இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்தே, அமைச்சின் செயலாளரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை அடுத்து, கடந்த 22ம் திகதி அமைச்சர் பந்துல குணவர்தன, தாராபுரம் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தாராபுரம் வாவிக்கு அருகில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தல், கட்டிடமொன்றை நிர்மாணித்தல் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தல், ஆரம்ப பாடசாலை, பராமரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் நிர்மாணித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக 775 மில்லியன் ரூபாவை செலவிட அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தாராபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இந்த கூட்டுறவு கிராம திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த நிதியை பயன்படுத்துவதற்காக கூட்டுறவு சங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லவென்பது தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது.

வரவு செலவுத்திட்டத்தில் 2017ம் ஆண்டு 300 மில்லியன் ரூபாவும், 2018ம் ஆண்டு 200 மில்லியன் ரூபாவும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கூட்டுறவு கிராமம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இனவாத செயற்பாடுகளில் பயிற்சிகளுக்காக இந்த கூட்டுறவு கிராமம் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறே, குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

தாராபுரம் கூட்டுறவு கிராம திட்டத்திற்காக இதுவரை செலுத்தாதுள்ள 60 மில்லியன் ரூபா நிதியை செலுத்துமாறு கோரி, வர்த்தக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவர், அமைச்சர் செயலாளர் பத்ராணி ஜயவர்தனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்த நிதித் தொகையை செலுத்த முடியாது என கூறியுள்ள அமைச்சின் செயலாளர், குறித்த கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்து, அந்த நிதித் தொகை செலுத்துவதை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மேலதிக செயலாளர், இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது நிதி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

Tags: சமல் ராஜபக்ஷதாராபுரம்பத்ராணி ஜயவர்தனபந்துல குணவர்தனமன்னார்ரிஷாட் பதியூதீன்
Previous Post

சமல் ராஜபக்ஷவிற்கு புதிய பொறுப்பு

Next Post

கல்முனை பாடசாலைகள் பூட்டு

Next Post

கல்முனை பாடசாலைகள் பூட்டு

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

IOC எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் l அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க IOCக்கு அனுமதி

August 8, 2022
பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

August 8, 2022
இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி!!

இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி!!

August 8, 2022
முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்!!

முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்!!

August 7, 2022

Recent News

IOC எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் l அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க IOCக்கு அனுமதி

August 8, 2022
313
பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

August 8, 2022
415
இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி!!

இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி!!

August 8, 2022
511
முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்!!

முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்!!

August 7, 2022
256
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved