நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க விஷேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணை செய்து நிறைவடையும் வரை, தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் அவர் மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் திகதி வழங்கியிருந்தது. (TrueCeylon)
Discussion about this post