சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தனது அரசியல் கட்சியை 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பிக்கும் திகதியை தான், எதிர்வரும் 31ம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!” என தனது டுவிட்டர் தளத்தில் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். (TrueCeylon)
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020