மேல் மாகாணத்திலுள்ள 57000 பேருக்கு இன்றைய தினத்திற்குள் கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதில் சுகாதார அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் 27,018 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 17,622 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 11,710 பேருக்கும் கொவிட் தடுப்பூசி இன்று வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் இதுவரை 196,163 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post