மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் எண்ணம் தமக்கு கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பிபிசிக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கின்றமை தொடர்பில் அரசாங்க மட்டத்தில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும், மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான தீர்மானமொன்றை அரசாங்கம் எட்டியுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிடுகின்றார்.
நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post