Friday, September 22, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

போதைப்பொருள் பயன்படுத்தினால், சாரதி அனுமதிப் பத்திரம் கிடைக்காது – அதிரடி அறிவிப்பு வெளியானது

admin by admin
December 29, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
248
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

போதைப்பொருள் பயன்படுத்துவோர் என அடையாளம் காணப்படுவோருக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்காதிருப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

கனரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிக்கும் சாரதிகளுக்கு நடத்தப்படும் விசேட இரத்த பரிசோதனைகளில், கடந்த ஒரு வருடத்திற்குள் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு ஆண்டு தோறும் விசேட இரத்த பரிசோதனைகள் நடத்தப்படும் என கூறிய அவர், போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை விநியோகிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கனரக வாகன சாரதிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் போதைப்பொருட்களை பயன்படுத்தி, வாகனங்களை செலுத்துவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த விசேட இரத்த பரிசோதனைகளை நடத்துவதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தற்போது விலைமனுக்கோரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார். (TrueCeylon)

Tags: #அமைச்சர்இராஜாங்க அமைச்சர்திலும் அமுனுகமபோக்குவரத்து அமைச்சு
Previous Post

9 நாட்களில் 39 உயிர்களை காவுக்கொண்ட வாகன விபத்துக்கள் – இந்த காலப் பகுதியில் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்?

Next Post

மேல் மாகாணத்தில் 80,000 பேரின் வாழ்க்கை கேள்வி குறியில்? – தொடரும் அச்ச நிலைமை?

Next Post

மேல் மாகாணத்தில் 80,000 பேரின் வாழ்க்கை கேள்வி குறியில்? - தொடரும் அச்ச நிலைமை?

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved