Friday, December 1, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

புதிய மெனிங் சந்தையில் இவ்வளவு வசதிகளா? – திறந்து வைத்தார் பிரதமர் (PHOTOS ALBUM)

admin by admin
November 20, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 2 mins read
246
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

பேலியகொட மெனிங் சந்தை தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

4 மாடிகளை கொண்ட அமைக்கப்பட்டுள்ள இந்த மெனிங் சந்தையில் 3ஆவது மாடி வரை மரக்கறி வகைகளை கொண்டு வருவதற்கான இயலுமை காணப்படுகின்றது.

2 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மெனிங் சந்தை கட்டிடத் தொகுதி, பின்னரான காலத்தில் 13.5 ஏக்கர் நிலப் பரப்பிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத் தொகுதிக்காக 6.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மரக்கறி சந்தைத் தொகுதியில் 1192 மரக்கறி வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன், 600 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஊழியர்களுக்கான ஓய்வறைகள், வைத்திய வசதிகள், வங்கிகள், உணவகங்கள் என அனைத்து வசதிகளும் இந்த வர்த்தக சந்தை தொகுதியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மெனிங் சந்தைத் தொகுதியை திறந்து வைத்ததை அடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்தினார்.

கொவிட்-19 தொற்று காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பணிகள் எந்தவிதத்திலும் தடைப்படாது முன்னெடுக்கப்படும் என பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.

எவ்வாறான சிரமங்கள் வந்தாலும், மக்களுக்கு சிரமங்களை எதிர்கொள்ளாது முன்னோக்கி பயணிக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமது அரசாங்கம் இருந்த காலப் பகுதியில் எட்டப்பட்ட தீர்மானங்கள், இன்று நிலைநாட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: கொவிட்கொவிட் 19கொவிட் கொத்தணிகொவிட் வைரஸ்கொவிட்19பிரதமர்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷபேலியகொடமஹிந்த ராஜபக்ஷமெனிங் சந்தை
Previous Post

பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பு தடைப்பட்டது ஏன்? உள்நோக்கமா காரணம்? – சபையின் கேள்வி?

Next Post

மாணவர்களுக்கு மத்தியில் கொவிட் கொத்தணி உருவானால் பொறுப்பு யார்? – பதிலளித்தார் கல்வி அமைச்சர்

Next Post

மாணவர்களுக்கு மத்தியில் கொவிட் கொத்தணி உருவானால் பொறுப்பு யார்? - பதிலளித்தார் கல்வி அமைச்சர்

Flash News

  • BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

    BREAKING NEWS :- இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காணாமல் போன முத்தையாபிள்ளை தேவராஜை தேடும் உறவினர்கள் (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நீர்வெட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் இணைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- G.C.E (O/L) பெறுபேறுகள் வெளியாகின

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved