Thursday, September 21, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

பாலித்த தெவரபெருமவின் படம் இவ்வாறு பகிரப்பட காரணம் என்ன? (PHOTO)

admin by admin
April 4, 2020
in இலங்கை
Reading Time: 1 min read
240
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

கொவிட் 19 வைரஸ் பரவி வருகின்ற நிலையில், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தனிநபர்களும் தம்மால் இயன்ற உதவிகளை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு செய்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை காண முடியாத நிலையில், அவர்களில் ஒருவரை மாத்திரமே நாம் அடிக்கடி கண்டு வருகின்றோம்.

கொவிட் 19 தொற்று இலங்கையை தாக்கிய சந்தர்ப்பத்தில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றது.

அந்த வேட்பு மனுத் தாக்கல் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், 20ஆம் திகதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்தது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் எந்தவித அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத நிலைமையை எதிர்நோக்கினார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் வாக்களித்த மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில், எந்தவித தயக்கமுமின்றி கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாலித்த தெவரபெரும ஒரு சாதாரண மனிதனை போன்று தானே உணவுகளை சமைத்து மக்களுக்கு பகிர்ந்தளித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

அது மாத்திரமன்றி கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முழுமையாக முடக்கப்பட்டுள்ள அட்டுளுகம பகுதிக்குள் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று பல போராட்டங்களுக்கு மத்தியில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட காணொளிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இவ்வாறு 12 நாட்கள் தொடர்ந்து இரவு பகல் பாராது உதவிகளை செய்து வரும் பாலித்த தெவரபெரும, சிறிது நேரம் நித்திரை கொள்ளும் படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றது.

 

Tags: கொவிட் 19பாலித்த தெவரபெரும
Previous Post

தமிழில் பாடி மக்களை இன்பமடையச் செய்யும் இலங்கை பொலிஸார் (VIDEO)

Next Post

கொவிட் – 19 :- ஆற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Next Post

கொவிட் - 19 :- ஆற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved