Thursday, August 18, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

பஸ்கள் மற்றும் ரயில்கள் இவ்வாறே இன்று நள்ளிரவு முதல் இயங்கும் – முழு விபரம் இங்கே

November 15, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
251
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

கொழும்பு – புறக்கோட்டை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பிடம் மற்றும் பேஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடம் ஆகியன இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களை, பஸ் தரிப்பிடத்திற்குள் அனுமதிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருன்டா தெரிவிக்கின்றார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் பஸ்கள் அனுமதிக்கப்படாத போதிலும், புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்திற்கு மாத்திரம் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை கடந்து பஸ்கள் பயணிக்க முடியும் என்ற போதிலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பஸ் சேவைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து ஆராயப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நடவடிக்கையானது, இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக்கவசத்தை அணிந்திருத்தல் வேண்டும், ஆசனங்களுக்கு அமைய பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என்பதுடன், பஸ்களில் பயணிகளின் பதிவுகளை மேற்கொள்வதற்கான ஆவணமொன்று இருக்க வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருன்டா தெரிவிக்கின்றார்.

ரயில் சேவைகள்

நாளை காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ரயில் சேவைகள் இடம்பெறாது எனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோட்டை ரயில் நிலையத்திற்கு மாத்திரம், அனைத்து ரயில்களும் வருகைத் தரும் என திணைக்களம் கூறுகின்றது.

இதன்படி, பிரதான ரயில் மார்க்கத்தில் மருதானை, வனவாசல, ராகமை, தெமட்டகொட, எந்தரமுல்ல, வல்பொல, களனி, ஹொரபே மற்றும் படுவத்த ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் ரயில் மார்க்கத்தில் பெரலந்த, குடஹகபொல, கட்டுவ, ஜாஎல, குருண, துடுல்ல மற்றும் நீர்கொழும்பு ஆகிய ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேஸ்லயின் மற்றும் கொடாபார ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது.

கரையோர ரயில் மார்க்கத்தில், கொத்பனிவீதி மற்றும் அங்குலாணை ஆகிய பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Tags: #புறக்கோட்டைஇலங்கைஇலங்கை போக்குவரத்து சபைஎந்தரமுல்லகட்டுவகளனிகுடஹகபொலகுருணகொழும்புஜாஎலதுடுல்லதெமட்டகொடநீர்கொழும்புபடுவத்தபுத்தளம்பெரலந்தபேஸ்லயின்போக்குவரத்து சபைமருதானைராகமைவனவாசலவல்பொலஹொரபே
Previous Post

ஜனாதிபதி, நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை

Next Post

கொவிட் தொற்றாளர்களின் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்? – இன்றைய நிலவரம்

Next Post

கொவிட் தொற்றாளர்களின் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்? - இன்றைய நிலவரம்

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022

Recent News

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
671
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
572
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
405
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022
323
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved