பலாங்கொடை – ஒலுகங்தொட்ட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.
இந்த தீ இன்று பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ பரவலினால் பெருமளவிலான தேயிலை கொலுந்துகள் மற்றும் தேயிலை தூள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த தீ விபத்தை அடுத்து, தொழிற்சாலையின் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தீயை பிரதேச மக்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)