Wednesday, December 6, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

தமிழ் ஊடகவியலாளர் மீது தாக்குதல் – விசாரணை தீவிரம்

admin by admin
November 12, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
283
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கொரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது தமிழ் கொடி என்ற அமைப்பு உதவிகளை வழங்கி வருவதாகவும், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி தனது பேஸ்புக் தளத்தில் ஊடகவியலாளர் எஸ்.முகுந்தன் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த பதவியை நீக்குமாறு கோரி தமிழ்க்கொடி அமைப்பினர் தொடர்ந்தும் ஊடகவியலாளர் முகுந்தனுக்கு அழுத்தங்களை விடுத்துள்ளனர்.

எனினும், பதிவை நீக்க மறுத்ததை அடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத சிலர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியது மாத்திரமன்றி, அவரது தொலைபேசியையும் குறித்த சந்தேகநபர்கள் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் முகுந்தன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து, இன்றைய தினம் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

 

#Alram!
There is a possibility of covid -19 virus spreading via humanitarian aid works. I don’t see any action by the…

Posted by Mugundan Suntharalingam on Monday, November 9, 2020

Tags: ஊடகவியலாளர்கொரோனாதமிழ்க்கொடிமுகுந்தன்யாழ்ப்பாணம்
Previous Post

ட்ரோன் கமராவின் உதவியுடன் 15 பேர் கைது (VIDEO)

Next Post

கிளிநொச்சி: சிறுவனை பலியெடுத்த சுவர் (PHOTOS)

Next Post

கிளிநொச்சி: சிறுவனை பலியெடுத்த சுவர் (PHOTOS)

Flash News

  • BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

    BREAKING NEWS :- இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காணாமல் போன முத்தையாபிள்ளை தேவராஜை தேடும் உறவினர்கள் (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- G.C.E (O/L) பெறுபேறுகள் வெளியாகின

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க திட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பஸ் விபத்தில் 30 பேர் காயம் l இருவரின் நிலைமை கவலைக்கிடம்

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved