திடீர் சுகயீனம் காரணமாக உயிர்நீத்த ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் நாளை (23) இடம்பெறவுள்ளன.
அவரது சொந்த ஊரான கண்டி – கந்தகட்டி பகுதியில் நாளை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு – புஞ்சி பொரள்ளையிலுள்ள லங்கா மலர்சாலையில், மக்கள் அஞ்சலிக்காக இன்றிரவு (22) வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நாளை காலை அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் கொண்டு சென்று, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், மாலை இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளன.
சக்தி நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் கடந்த 4 வருட காலமாக சந்திரமதி குழந்தைவேல் கடமையாற்றியிருந்தார்.
கொழும்பிலுள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு அவர் காலமானார்.
திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
சந்திரமதியின் பூதவுடலில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.