Wednesday, May 25, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

கொவிட்:- பூதவுடல்களை அடக்கம் செய்ய கோரும் மற்றுமொரு தரப்பு – அலி சப்ரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

November 14, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
237
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று வெளியிட்டுள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் பூதவுடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

World Express Services World Express Services World Express Services

முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி, கத்தோலிக்க மக்களும் அடக்கம் செய்வதற்கான கோரிக்கையை விடுத்து வருவதாக நீதி அமைச்சர் கூறுகின்றார்.

எனினும், கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கையை, முஸ்லிம் மக்களே அதிகளவில் விடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஏனைய நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோரிக்கையை ஏற்று செயற்படுகின்றமையினால், அரசாங்கம் என்ற விதத்தில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

நாட்டில் கொவிட் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள பின்னணயில், முஸ்லிம் மக்கள் மிகவும் வேதனை அடைந்த நிலையிலேயே, ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து மீண்டும் சமூகத்தில் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

அமைச்சரவையில் உள்ள ஒரேயொரு முஸ்லிம் தான் என்பதனால், தானே இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பிலான கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்தது தான் எனவும், அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அலி சப்ரி கூறுகின்றார்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவைக்குள் எந்தவித எதிர்ப்பும் கிடையாது என்ற போதிலும், இதற்கான தீர்மானத்தை அமைச்சரவையினால் எடுக்க முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரே எடுக்க வேண்டும் என்பதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், மேற்குலக நாடுகள் என அனைவரும் கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என கூறும் போது, ஏன் இலங்கையில் செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக கோரிக்கையானது, முஸ்லிம் என்ற அடிப்படையில் அன்றி, அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளமையினாலேயே கோரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

முஸ்லிம் மார்க்கத்தில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளமையினால் மாத்திரமே, இந்த மத அடிப்படையிலான சர்ச்சையாக மாறியுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகின்றார்.

Tags: அமைச்சரவைஅலி சப்ரிஐக்கிய நாடுகள் சபைஐரோப்பிய ஒன்றியம்கொவிட்கொவிட் 19கொவிட் கொத்தணிகொவிட் வைரஸ்கொவிட்19ஜனாஸாநீதி அமைச்சர்நீதி அமைச்சர் அலி சப்ரிமுஸ்லிம்மேற்குலக நாடுகள்
Previous Post

கொவிட் தொற்றில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டம்? – கடும் எச்சரிக்கை விடும் சுகாதார பிரிவு

Next Post

டயானாவிற்கு என்ன நேர்ந்தது – இறுதித் தீர்மானம் வெளியானது.

Next Post

டயானாவிற்கு என்ன நேர்ந்தது - இறுதித் தீர்மானம் வெளியானது.

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020
பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

October 31, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022

Recent News

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
578
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
396
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
504
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022
252
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved