இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று (02) வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், மூன்று கொவிட் உயிரிழப்புக்கள் இறுதியாக பதிவாகியுள்ளன.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 மற்றும் 12 ஆகிய பகுதிகளைச்சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், அடையாளம் காணப்படாத ஒருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
93, 76 வயதுகளை உடையவர்களே கொழும்பில் உயிரிழந்துள்ள அதேவேளை, அடையாளம் தெரியாத நபரினால் வயது 70 முதல் 80க்கு இடையில் இருக்கலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர் மருதானை பகுதியிலிருந்தே அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த மூன்று உயிரிழப்புக்களும் கொழும்பு மாநகர எல்லைக்குள் நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post