கொழும்பு நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்களில் தொற்றா நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கான விசேட நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்று காரணமாக இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் நோய் ஒழிப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது.
அத்துடன், தமது சுகாதார நிலைமைகள் குறித்து தொலைபேசி ஊடாக அறிந்துக்கொள்ளும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
24 மணித்தியாலங்களும் இந்த வைத்திய குழு செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.