இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்சி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஒருவரே இந்த வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இதுவலைர 178 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 38 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.