இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயத்தை உறுதிப்படுத்தி கூறியதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், த ஹிந்து நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 22ம் திகதி இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரையும் அவர் சந்தித்து, இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்று பரவ ஆரம்பித்த கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள், நாட்டிற்கு வருகைத் தரும் முதலாவது அரசத் தலைவராக இம்ரான் கான் வரலாற்றில் இடம்பிடிக்கின்றார்.
இலங்கை, பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வரும் அதேவேளை, இந்திய – பாகிஸ்தான் அமைதியின்மை குறித்து, கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து இலங்கை விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post