இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 78 மற்றும் 64 வயதான இரண்டு ஆண்கள் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்த ஐவருக்கும் வேறு தொற்றா நோய்கள் இருந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.