இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய, இறுதியான ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றினால் இதுவரை 37,261 பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 28,267 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், 8,823 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தோரின் விபரம்
01. பனாகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண்.
02. கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஆண்.
03. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்.
04. கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஆண்.
05. பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஆண்.
(TrueCeylon)