இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215ஆக அதிகரித்துள்ளது.
குறித்த இரண்டு உயிரிழப்புக்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி 71 வயதான ஆண்ணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
சுவாச கோளாறு, நுரையீரல் பிரச்சினை என்பவற்றுடன் ஏற்பட்ட கொவிட் தொற்றே, உயிரிழப்புக்கான காரணம் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post