Friday, September 22, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட்டது உதவும் கரங்களின் ஆடைத் தொழிற்சாலை – மலையகத்திற்கு கிடைக்கும் தொழில்வாய்ப்புக்கள் (PHOTOS)

admin by admin
December 12, 2020
in இலங்கை, செய்தி துளிகள், செய்திகள்
Reading Time: 1 min read
248
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

உதவும் கரங்கள் அமைப்பில் உதவித் திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் முதலாவது ஆடைத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – ஹப்புகஸ்தென்ன – கல்லெல்ல – டேனாகந்த பகுதியில் இந்த ஆடைத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடைத் தொழிற்சாலை இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

10 லட்சம் ரூபா செலவில் இந்த ஆடைத் தொழிற்சாலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக உதவும் கரங்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள மலையக இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டமொன்றை உதவும் கரங்கள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

”சொந்த ஊரில் சொந்த தொழில் செய்வோம். சொந்த காலில் நிற்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் முதற்கட்டமாகவே, இந்த ஆடைத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

கொவிட் தொற்று காரணமாக இரத்தினபுரியில் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள இளைஞர், யுவதிகளின் வறுமை நிலைமையை போக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

முதற்கட்டமாக 20 இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் அதனை விஸ்தரித்து, பெரும்பாலான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் உதவும் கரங்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கின்ற அந்த அமைப்பு, தம்முடன் ஏனையோரையும் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றது. (TrueCeylon)

PHOTO CREDIT :- MALAYAGAM.LK

Tags: இரத்தினபுரிகல்லெல்லகொவிட்கொவிட் 19கொவிட் பாதுகாப்பு நிதியம்கொவிட் வைரஸ்கொவிட்−19கொவிட்19ஹப்புகஸ்தென்ன
Previous Post

வாஸ் குணவர்தனவிற்கு கொவிட் தொற்று

Next Post

ஆலய மணி கயிற்றில் கழுத்து இறுகி உயிரிழந்த மலையக சிறுவன் (PHOTO)

Next Post

ஆலய மணி கயிற்றில் கழுத்து இறுகி உயிரிழந்த மலையக சிறுவன் (PHOTO)

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved