கொழும்பு மாவட்டத்திற்கு வெளியிலுள்ள ஏனைய பகுதிகளில் கொவிட் இணை கொத்தணிகள் உருவாகுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பு மாநகர எல்லைக்குள் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ள போதிலும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.
களுத்துறை, பேருவளை, மொனராகலை மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் கொவிட் இணை கொத்தணிகள் உருவாவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சுகாதார பிரிவின் ஆலோசனைகளை சரியான முறையில் கடைபிடித்து, புதிய கொவிட் கொத்தணி உருவாகுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரிக்கை விடுக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post