Friday, December 1, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

admin by admin
January 20, 2021
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
325
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

மூன்றாம் இணைப்பு

யாழ்ப்பாணம் − நெடுந்தீவு அருகில் விபத்துக்குள்ளான இந்திய மீனவப் படகிலிருந்து இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா இதனை எமது செய்திப் பிரிவிற்கு கூறினார்.

மூழ்கிய படகிலிருந்தே இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல்கள் இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்திய அதிகாரிகளின் தகவல்களுக்கு அமைய, நான்கு மீனவர்கள் குறித்த படகில் பயணித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சிய இரு மீனவர்களையும் தாம் தொடர்ந்து தேடி வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணம் − நெடுந்தீவு பகுதியில் மூழ்கிய இந்திய மீனவப் படகு மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

எனினும், காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் − நெடுந்தீவு கடலில் இலங்கை கடற்படை படகுடன் மோதுண்டு, கடலில் மூழ்கிய மீனவப் படகை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (20) அதிகாலை முதல் மீனவப் படகை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவிக்கின்றார்.

 

குறித்த படகில் பயணித்த மீனவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் கூறினார்.(TrueCeylon)

முழுமையான செய்தி

Previous Post

இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் 1000தை தாண்டிய மற்றுமொரு மாவட்டம் (முழு விபரம் இணைப்பு)

Next Post

31 யானைகள் மாயம், 12 யானைகள் இறப்பு : விசாரணைகளுக்கு உத்தரவு

Next Post

31 யானைகள் மாயம், 12 யானைகள் இறப்பு : விசாரணைகளுக்கு உத்தரவு

Discussion about this post

Flash News

  • BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது

    BREAKING NEWS :- இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காணாமல் போன முத்தையாபிள்ளை தேவராஜை தேடும் உறவினர்கள் (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நீர்வெட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் இணைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- G.C.E (O/L) பெறுபேறுகள் வெளியாகின

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved