கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
நுகேகொடை பகுதியில் இளைஞர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையர்கள் அனைவருக்கும் மார்ச் மாதம் ஆகும் போது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் உறுதி வழங்கிய போதிலும், அது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.
உங்களின் ஆட்சி இருந்திருக்கும் பட்சத்தில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு என்ன செய்திருப்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு ரணில் விக்ரமசிங்க புன்னகையுடன் பதிலொன்றை வழங்கியிருந்தார்.
”ஒரே நன்மை இருக்கின்றது. அரசாங்கத்திலும் இல்லை. பாராளுமன்றத்திலும் இல்லை. அப்படியென்றால், ஒன்றும் செய்ய தேவையில்லை” என பதிலளித்தார். (TrueCeylon)
Discussion about this post