Friday, September 22, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

அரசாங்கத்திடம் இல்லாத ஒன்று – சபையில் வெளிப்படுத்திய மனோ கணேசன்

admin by admin
January 5, 2021
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
243
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

இலங்கையில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு மற்றுமொரு சட்டம் என பிரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறது என சுரேன் ராகவன் தெரிவித்துள்ள பின்னணியிலேயே, மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கம் இருக்கின்றதா என சுரேன் ராகவனிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

”ஒரே நாடு, ஒரே சட்டம்” என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில், சிறைத் தண்டனை கைதியான பௌத்த தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைப்பதாக கூறிய மனோ கணேசன், தமிழ் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தின் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு என்றல்லவா இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவா தேசிய நல்லிணக்கம் என சுரேன் ராகவனை நோக்கி கேள்வி எழுப்பிய மனோ கணேசன், அரசாங்கத்திடம் இல்லாத ஒன்றிற்காக மாறடிக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)

Tags: இலங்கைஐக்கிய மக்கள் சக்திஒரே சட்டம்ஒரே நாடுகனடாசுரேன் ராகவன்தமிழ் முற்போக்கு கூட்டணிமனோ கணேசன்
Previous Post

கண்டி நிலஅதிர்வு:- நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியானது

Next Post

அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக வழக்கு

Next Post

அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக வழக்கு

Discussion about this post

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved